Monday, April 28, 2014

நான் முத்துசாமிப் பேரன் - என்னைப் பற்றி

படித்துமுடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்ற வேலையில்லா பட்டதாரிக்கு வேலைதேடும் நேரம்போக வாசிப்பைத் தாண்டி வேறு என்ன பொழுதுபோக்கு இருந்து விடமுடியும். அதனால் வாசிப்பும், வாசித்ததை அசைபோடுதலுமே தற்சமயம் முழுநேரத்தொழில். எழுதலாமே என்ற ஆர்வம் பொழுதுபோகா நல்ல நேரத்தில் தலைஉயர்த்திப் பார்த்ததால்  எழுதித்தான் பார்ப்போமே என அதற்கும் பிள்ளையார்சுழி போட்டாயிற்று. 

நல்ல வாசகனில் இருந்து நல்ல விமர்சகன் உருவாகிறான், நல்ல விமர்சகனில் இருந்து ஒரு படைப்பாளி உருவாகிறான், வாசிப்பு - விமர்சனம் - படைப்பு என்ற மூன்று கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் எழுத்துலகம் என்னையும் வாசிக்க வேண்டுமென ஒரு சிறிய ஆசை. 

சொந்தபெயரில் எழுதலாம் தான், ஏற்கனவே தண்டச்சோறு. போதாகுறைக்கு எம்ப்ளாயிமென்ட் நியூஸும், ஜிகே-டுடேவும் வாங்க வேண்டிய காசுகள் நாவலாகவும் இலக்கியமாகவும் மாறிக் கொண்டுள்ளன. "நீ எழுதி என்ன கிழிக்கபோற" என என்னைக் கிழிதெடுக்க என் சுற்றம் சுகமாய் காத்துக்கிடக்கிறது. சிந்தித்துப் பார்த்ததில் சில சமயங்களில் தலைமறைவு அவசியம் என்பான் முத்துசாமிப் பேரன். எனவே இந்த உலகில் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் பேக்ஐடிக்களில் ஒன்றாய் இந்த பேக்கின் ஐடியும் இருந்துவிட்டுப் போகட்டுமே. காசா பணமா. லேரிபேஜ் நாமம் வாழ்க! செர்ஜி பிரைன் நாமம் வாழ்க. என்னை வாசிக்க நேசிக்கப்போகும் உங்கள் நாமம் வாழ்க! 

எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத்தாளர்களோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் முத்துசாமிப் பேரன். அவன் முயற்சி வெற்றியடையட்டும். 

- நான் முத்துசாமிப் பேரன்.   

    

11 comments:

  1. எழுத்து நடை எளிமையாக உள்ளது. தொடந்து எழுதுங்கள். எனது முகநூல் https://facebook.com/MurugaboopathyK

    ReplyDelete
  2. முத்துசாமிப் பேரன். முயற்சி வெற்றியடையட்டும்.
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. எளிய எழுத்து நடையில் வார்த்தை சிக்கனத்தோடு அழகான ஆரம்பம்... தொடருங்கள், வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. முத்துசாமிப் பேரன்... வித்தியாசமான பெயர்! வருக...வருக... கலக்குங்க!

    ReplyDelete
  5. ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைங்க...

    ReplyDelete
  6. காலம் மாறும். எழுதுங்கள் . உங்கள் பெயரே நன்றாக இருக்கிறது. நிறையப் பின்னூட்டம் இடுங்கள் நிறைய வலைத்தளங்கள் சென்று வாருங்கள் இது நான் வந்த[போது எனக்குக் கிடைத்த புத்திமதி. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  7. ஆமாம் பிரதர்... சரியான வேலை அமையாமல் நான் இருந்த காலகட்டத்தில் புத்தகங்கள் நிறைய வாசிக்கும் என் ஆர்வத்தையும் எழுதத் துடித்த முயற்சியையும் பரம சுகமாய் சுற்றம் கிழித்தெடுக்கத்தான் செய்தது. என் விருப்பம் நிறைவேற பல ஆண்டுகள் காத்திருந்தேன் நான். உங்களுக்கும் காலம் கனிந்து வரும். அப்படி நிறைய எழுதும் காலத்திலும் முத்துசாமிப் பேரன் என்கிற பெயரை மாற்ற வேண்டாம். இதுவே நல்லா இருக்குது.

    ReplyDelete
  8. மிக அருமையான அறிமுகம்! சிறப்பான வலைப்பதிவராக உருவெடுக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. " வாங்கஜீ ! வாங்கஜீ ! ஒண்ணா டீம் ஒர்க் பண்ணலாம்ஜீ !!! "

    ஹஸ்யத்துக்காக சொன்னேன் நண்பரே ! வித்யாசமான பெயருடனும் அருமையான தொடக்கத்துடனும் ஆரம்பிக்கபட்டிருக்கும் உங்களின் வலைப்பூ சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  10. "//எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத்தாளர்களோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் முத்துசாமிப் பேரன். அவன் முயற்சி வெற்றியடையட்டும். //"

    - அடடா! என்ன அழகா சொல்லிட்டீங்க.
    உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. எழுத்தாளனாக வாழ வேண்டுமென்றெல்லாம் ஆசையில்லை. எழுத்தாளர்களோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான் முத்துசாமிப் பேரன்
    >>
    வாங்க! வாங்க! வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க கடைக்குட்டி தம்பி!

    ReplyDelete